Friday, April 9, 2010

மலர்களின் மகத்துவம்





மிதமான காற்று இதமான உன் தேகம் பற்றி செல்ல

அதிகாலை மலர்ந்த பூக்கள் உன் கூந்தல் ஏறி நிற்க

சில நிகழ்வுகள் மட்டும் வாழ்வின் இறுதி வரை

அகலாமல் மனதில் அமர்ந்து விடும் புதையலாய் ......

உன் ஓசை இல்லா மொழிகள்

என் வசம் காட்டி செல்லும் புன்னகையில் !!!

குளிர் காற்று சில்லென தேகம் சிலிர்க்க

கார்மேகம் கதிரவன் முகம் மறைக்க .......

ஈர நிலம் என்னவள் பாதம் நனைக்க ..

சாலையில் ஆறாய் நீரும்.....

பாரினில் மண்வாசம் படர்ந்து செல்ல ..........

கண்ணிமைத்த சில தருணங்களில் ...

எத்தனை எத்தனை மாற்றங்கள் ???

2 comments:

Unknown said...

Really nice one ,,, Keep up your high spirit !!!

முனைவர் கு. கமலகிருஷ்ணன் said...

மிகவும் நேர்த்தியான கவிதை நடை