கொள்கையால் வீரனாக்கி
மென்மையால் ஞானியாக்கி
பாரினில் புகழை ஏத்தி
பரப்பினாய் மனதில் போற்றி .......
சினந்தரும் மனதை தகைத்து
பயம் எனும் நினைவை அறுத்து
பலரும் உன் தோழைமை போற்ற
நல்கிய நம்பிக்கையே !!!
சிலையினில் வடிவம் கண்டாய்
சீர்மேவும் கலைகள் கொண்டாய்
யுக்தியால் விண்ணை அளந்தாய் ....
உலகினில் முடியும் உன்னால்
உணர்ந்து நில் ......
உலகம் உன் பின்னால் ........
