Friday, August 7, 2009

வாழ்த்துங்கள் என் தோழியை .....




எழுத்துக்களில் அகரமாய்
என்றுமே நீ சிகரமாய்

மலரினும் மெல்லிய மனதோடும்
தீயினும் மிக்க துணிவோடும்

தென்றலாய் சிலிர்த்து
சூறாவளியை எதிர்த்து .....

திசைதோறும் புகழ் மணக்க
இசையாக நீ இனிக்க

இன்புற்று வாழ்க !!!!
இனிதே வாழ்வாங்கு வாழ்க !!!

Wednesday, August 5, 2009

ஒற்றை ரோஜா !!!

மௌன மொழி பேசும் பூவே !!!

குயில் பாடும் கானம் உன் குரலாய் .....

தென்றல் உன் சுவாசமாய் .....

மயில் சூடும் தோகை உன் கூந்தலாய்......

கடலோடு நதியும் ஒன்றாக சங்கமிக்கும்

ஆற்று படுகைகளின் கரையோரத்தில் ......

முழுமதியின் அரவணைப்பில் .....

திருமகளின் ஒளிமுகத்தை காண.....

கரை ஒதுங்கும் அலைகளுக்குள்

இத்தனை போட்டியா?

இல்லை என்னவளின் கான குரலை

மொழி பெயர்க்கும் முயற்சியா?