Friday, April 24, 2009

திங்களை தேடி ........

வேரின் நுனி நல்கும் கூரியதாய்...

பாறைகளை ஊடுருவி காலுன்றும்......

நும் பாச மொழிகளாம் கணைகள்

எம் இருதய தவிப்பினை இடையறுக்க ......

விண்ணை நோக்கி வளரும் கிளைகளாம்

பசுமை இலைகளாம்

உன்னை பற்றிய மேலான சிந்தனைகள்

என்னுள் உணர்வுகளாய் ஊடுருவ....

தேனின் சுவை ததும்பும்

வாடாமணங்கமழும் மலர்களாம் ......

நும் செவ்விதழ்கள் செதுக்கிய தேன்மொழிகள்

எம் செவி நிறைக்க ........

மாறாத ஒளியுடைய சூரியனாய்....

பாரில் யாவரிடத்தும் .......

மாறாத முக மலர்வால்

எனில் மட்டும் குளிர் நிலவாய் ........

தேடாத நாட்கள் இல்லை

என் கனவில்.......

தேவதையே எங்கு நீயோ ????

தேடுகிறேன் நாளும் நானும் !!!!

Tuesday, April 21, 2009

ஒரு நாள் என் கனவில்.....




காதல் எனும் கடலில் ...
நட்பு எனும் கப்பலில்
நாம் பயணித்த போது
சாதி எனும் புயல் தாக்கவே
சமுத்திரமும் வறண்டு போய் ...
பாலைவனமாய் தோன்றியது .....
அப்போது தான் அறிந்தேன் அன்பே !!!
நாம் பயணித்தது கானல் கடலிலே !!!!!

கண்ட நாள் முதல் ........




பருவ மோதல்களின் பனித்துளிகள்...
ஒரு சேர உனை அழைக்கும் .....
கருவறையிலிருந்து பிறந்தது போல் உணர்ந்தேன் -
உனை கண்ட நாள் முதல் .....

மாறாத வாழ்வில் மாற்றத்தை ஏற்றினாய் ....
மாற்றமுள்ள வாழ்வில் ஏற்றத்தை ஊற்றினாய் ......

நாடியின் வீதியில் ஓடும் ஜீவநதி
நொடி நின்று....
உடலே சிலிர்த்தது ....
நீ எனை கண்ட நாள் முதல் ...

கண்களால் உறவாடி ....
சிரிப்பிலே நடமாடி ...
கலைந்த பின் உணர்ந்தேன் ......

மாயையின் மோகத்தீ காதல் .....
உணர்ந்தேன் .....
வெளி வர இயலவில்லை ஏன்?



கானல் கனவுகள்........




துகில் மிகு மேரு மலை
சல சலக்கும் சிற்றோடை ....
மணங்கமழும் பூஞ்சோலை
மயிலும் அங்கு அகவலிடும் .....
மானும் அங்கு துள்ளி ஓடும்
நடந்து வரும் பாதை எல்லாம் .....
நந்தவனமாய் நீ அமைத்து
தென்றல் தாங்கி வரும் .....
திருமேனி பெருங்கமழே !!!
திவ்யதேசமே !!!
விண்ணகத்தே வெள்ளி விழா !!!!!
தேவமகள் காணும் உலா !!!!!
அமைதி விளக்கில் ஆரவார விளக்கேற்றி
அரங்கேரியதொரு அற்புத திருவிழா!!!
காக்கை தன் கூட்டினின்றுசிறகடித்து பறந்தது ....
கதிரவன் தன் செங்கதிரை காட்டினான்
என் முகத்தில் கனவு கலைந்தது ....
காலை பிறந்தது .....

Monday, April 20, 2009