Tuesday, April 21, 2009

கானல் கனவுகள்........




துகில் மிகு மேரு மலை
சல சலக்கும் சிற்றோடை ....
மணங்கமழும் பூஞ்சோலை
மயிலும் அங்கு அகவலிடும் .....
மானும் அங்கு துள்ளி ஓடும்
நடந்து வரும் பாதை எல்லாம் .....
நந்தவனமாய் நீ அமைத்து
தென்றல் தாங்கி வரும் .....
திருமேனி பெருங்கமழே !!!
திவ்யதேசமே !!!
விண்ணகத்தே வெள்ளி விழா !!!!!
தேவமகள் காணும் உலா !!!!!
அமைதி விளக்கில் ஆரவார விளக்கேற்றி
அரங்கேரியதொரு அற்புத திருவிழா!!!
காக்கை தன் கூட்டினின்றுசிறகடித்து பறந்தது ....
கதிரவன் தன் செங்கதிரை காட்டினான்
என் முகத்தில் கனவு கலைந்தது ....
காலை பிறந்தது .....

No comments: