Friday, April 24, 2009

திங்களை தேடி ........

வேரின் நுனி நல்கும் கூரியதாய்...

பாறைகளை ஊடுருவி காலுன்றும்......

நும் பாச மொழிகளாம் கணைகள்

எம் இருதய தவிப்பினை இடையறுக்க ......

விண்ணை நோக்கி வளரும் கிளைகளாம்

பசுமை இலைகளாம்

உன்னை பற்றிய மேலான சிந்தனைகள்

என்னுள் உணர்வுகளாய் ஊடுருவ....

தேனின் சுவை ததும்பும்

வாடாமணங்கமழும் மலர்களாம் ......

நும் செவ்விதழ்கள் செதுக்கிய தேன்மொழிகள்

எம் செவி நிறைக்க ........

மாறாத ஒளியுடைய சூரியனாய்....

பாரில் யாவரிடத்தும் .......

மாறாத முக மலர்வால்

எனில் மட்டும் குளிர் நிலவாய் ........

தேடாத நாட்கள் இல்லை

என் கனவில்.......

தேவதையே எங்கு நீயோ ????

தேடுகிறேன் நாளும் நானும் !!!!

No comments: