Thursday, June 4, 2009

திரும்பி பார்க்கிறேன்.....




காவிரி கரையில் கரை புரண்டோடும் நீரில்
தாவி ஓடி குதித்து மகிழ்ந்தாடி

காடுகள் செழிக்க பரவிய ஓசையாய்
கண்கட்டு வித்தை ஆடிய மரத்தடிகள்

பூங்குயில் இசைக்கும் கூ ..... கூ ..... பாடல்கள்
வெள்ளை முயலோடு செல்ல யுத்தங்கள்

ஆற்று மீன்களுடன் ஆடல் நிகழ்வுகள் ....
சேற்று தவளைகளின் கூவல் ஒலிகள்

சாரல் மழையில் குளிர் நடுக்கங்கள்
மரங்களின் அடியில் மந்தை கூட்டங்கள்

சோலை மணம் பரப்பும் பூங்காவனம் - அதிலே
மாலை மணம் பரப்பும் மங்கையர் கூட்டம்

காண்பார் மனம் பறிக்கும்
காட்சி முதல் தருவே !

சலங்கை ஒலி முழக்கம்
மங்கையர் தம் நகையே !


சிரித்த முகத்தோடு

கருத்து பரிமாற்றங்கள் ..........

கண்களால் மட்டும் ....

தெவிட்டாத இன்பமாய்
விடலை பருவ நிகழ்வுகள்
அகலாமல் என் மனதில்
அமர்ந்து விட்ட புதையலாய் ............
திரும்பி பார்க்கிறேன் ...............

அவள் விழிகள் ......






கன்னியின் கருவிழியும்
கதிரவன் தம் சுடர் விழியும்

சமம் தானோ?
கணநேரம் சிந்திப்போம் ....

காற்றுக்குள் ஊற்றாகி
கவிதையே தேனாகி

ஏற்கும் திறன்களெல்லாம்
உமக்குள் உருவாக

உனை நினைந்தேன் ...
எனை மறந்தேன்

ஒரு போதும் உனை கடக்க
பரிதவிக்கும் பகல் - இரவு

பார்த்த பின் உணரும் தன்
தோற்றத்தை ......

யுத்த களத்தில் ரத்த நதியாய்
(ஏ)மாற்றி விடாதே வாழ்கை பயணத்தை .......