
கலைமகளின் உருவான தலைமகளே
திருமொழிகள் பல கூறும் நல்லறிவே
பாரினிலே பல கலைகள் நீ கற்று
பண்போடும் அன்போடும் வாழ்ந்திடவே
திரளான செல்வங்களை நீ அடைந்து
தினந்தோறும் சுகமாக வாழ்ந்திடவே
சரித்திரத்தில் உந்தன் பெயர் இடம்பெறவே
செயல்கள் யாவும் செம்மையாக சிறந்திடவே
முப்பத்து முக்கோடி தேவர்களும்
உன்னை வாழ்த்தும் நாளாம் இந்நன்னாளில்
மனதார வாழ்த்துகிறேன் தாரகையே !!!
1 comment:
Thank you very much Raj Kumar 😊
Post a Comment