Friday, September 30, 2011

அன்பு சகோதரிக்கு ஒரு வாழ்த்து மடல்



கலைமகளின் உருவான தலைமகளே

திருமொழிகள் பல கூறும் நல்லறிவே

பாரினிலே பல கலைகள் நீ கற்று
பண்போடும் அன்போடும் வாழ்ந்திடவே

திரளான செல்வங்களை நீ அடைந்து
தினந்தோறும் சுகமாக வாழ்ந்திடவே

சரித்திரத்தில் உந்தன் பெயர் இடம்பெறவே
செயல்கள் யாவும் செம்மையாக சிறந்திடவே

முப்பத்து முக்கோடி தேவர்களும்
உன்னை வாழ்த்தும் நாளாம் இந்நன்னாளில்
மனதார வாழ்த்துகிறேன் தாரகையே !!!

1 comment:

Unknown said...

Thank you very much Raj Kumar 😊