Friday, November 13, 2009







ஓ!!!
மழையே


கருமுகிலின் திரள் நடுவே ....
நீர்த்துளிகள் இடம் பெறவே ...........

வறண்ட நிலம் வளம் பெறவே ..........
விவசாயி வாழ்வுறவே.........

உலக மக்கள் உணவுறவே..........
வசந்த காலம் தொடங்கிடவே ..........

உன் முத்தான நீர்த்துளிகள் ............
மண்ணை முத்தமிட .................

காதலர்கள் நனைந்திடவே .....................
மழலைகள் வீதி நீரில் கப்பல் விடவே ...............

காற்றும் அது குளிர்ந்திடவே.......................
என்னவளின் திருவாய் மலர்ந்து ......

ஹேய் மழை பெய்யுதுடி எனும்
கவிதை மொழி கூறிடவே ........

மரங்களின் நடுவே மழை துளிகள்
உதிர்த்து சென்ற நீரில் நனைந்த இலைகள் !!!

என்னவளின் வருகையை நோக்கி
வீசிய தென்றலால் சிலிர்த்த .......................

ஒன்றிரண்டு நீர் திவலைகளால் ......
என்னவளின் தேகம் சிலிர்க்க ......
வியர்த்து கொட்டியது மழைக்கு......

No comments: