Tuesday, April 21, 2009

கண்ட நாள் முதல் ........




பருவ மோதல்களின் பனித்துளிகள்...
ஒரு சேர உனை அழைக்கும் .....
கருவறையிலிருந்து பிறந்தது போல் உணர்ந்தேன் -
உனை கண்ட நாள் முதல் .....

மாறாத வாழ்வில் மாற்றத்தை ஏற்றினாய் ....
மாற்றமுள்ள வாழ்வில் ஏற்றத்தை ஊற்றினாய் ......

நாடியின் வீதியில் ஓடும் ஜீவநதி
நொடி நின்று....
உடலே சிலிர்த்தது ....
நீ எனை கண்ட நாள் முதல் ...

கண்களால் உறவாடி ....
சிரிப்பிலே நடமாடி ...
கலைந்த பின் உணர்ந்தேன் ......

மாயையின் மோகத்தீ காதல் .....
உணர்ந்தேன் .....
வெளி வர இயலவில்லை ஏன்?



1 comment:

Nayeem said...

Kalakitinge Rajkumar :-)

~~ Nayeem ~~